சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கக் கோரி இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் - முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கக் கோரி இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் - முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மை வழக்காடு மொழியாகவும், நீ
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கக் கோரி இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் - முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மை வழக்காடு மொழியாகவும், நீதிமன்ற ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.  இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். தமிழகத்தின் தாய்மொழியான தமிழில் வழக்காடவும், தீர்ப்புகளை பெறவும் சாதாரண மக்களுக்கு உரிமை வேண்டும் என்பதும், நீதி அனைவருக்கும் புரியும் மொழியில் கிடைக்க வேண்டும் என்பதும் இந்த தீர்மானத்தின் மைய நோக்கமாகும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின்படி உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் மட்டுமே தற்போது அலுவல் மொழியாக உள்ளது. இதில் திருத்தம் கொண்டுவந்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.  ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும், வழக்கறிஞர்கள் சங்கங்களும் இதே கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன.   இந்நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு வலுவான அழுத்தத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கக் கோரி இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் - முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மை வழக்காடு மொழியாகவும், நீதிமன்ற ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். தமிழகத்தின் தாய்மொழியான தமிழில் வழக்காடவும், தீர்ப்புகளை பெறவும் சாதாரண மக்களுக்கு உரிமை வேண்டும் என்பதும், நீதி அனைவருக்கும் புரியும் மொழியில் கிடைக்க வேண்டும் என்பதும் இந்த தீர்மானத்தின் மைய நோக்கமாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின்படி உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் மட்டுமே தற்போது அலுவல் மொழியாக உள்ளது. இதில் திருத்தம் கொண்டுவந்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும், வழக்கறிஞர்கள் சங்கங்களும் இதே கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு வலுவான அழுத்தத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b