தொழில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் கோ.ஹரி திருத்தணி தொகுதியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். திருத்தணி மற்றும் அதன் சுற
தொழில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் கோ.ஹரி திருத்தணி தொகுதியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ஜவுளி பூங்கா ஒன்று திறக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், திருத்தணியில் தனியாக ஜவுளி பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும், இதற்கு தொழில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்றும் அவர் விளக்கினார்.

முதலீட்டாளர்கள் முன்வந்தால், திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்குத் தேவையான நிலம் ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / vidya.b