Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் சிஇஓவாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது மேற்கு விமானப்படை கட்டளையை வழிநடத்திய மிஸ்ரா, நேற்று ஆம் தேதி அயோத்தியில் நடைபெற்ற அறங்காவலர்கள் கூட்டத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில் சிஇஓ நியமனம், காலியாக உள்ள அறங்காவலர் பதவிகளை நிரப்புதல், 2025-26 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்குகளுக்கு ஒப்புதல், நிதி முறைகேடுகள் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையின் முன்னேற்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நம்பகத்தன்மை குறித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி சனாதன் பாண்டே சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
அயோத்தி ராமர் கோயிலில் அறக்கட்டளை முன்பும் இருந்தது. ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்டபோது, அதே உறுப்பினர்கள் தான் அறக்கட்டளையில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மக்களின் பணம் எங்கே போனது? இது ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஒரு சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ராமர் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர்களே செய்துள்ளனர். இது இன்னும் பெரிய மோசடியாக மாறும். இங்கு ஒருவர் எவ்வளவு பெரிய மோசடிக்காரராக இருக்கிறாரோ, அவ்வளவு பெரிய தலைவராகவும் 'கர சேவகராகவும்' ஆகிறார்.
என்று அவர் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமன விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் பாஜகவை விமர்சித்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் தெலுங்கானா பிரிவு மிஸ்ராவின் நியமனத்தை வரவேற்றுள்ளது.
இந்த நியமனம் உயர்மட்ட கோயிலின் நிர்வாகத்தில் தொழில்முறை, ஒழுக்கம் மற்றும் மேம்பட்ட நிர்வாகத் திறனை கொண்டு வரும் நடவடிக்கை என அது விவரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b