Enter your Email Address to subscribe to our newsletters

அகர்தலா, 06 செப்டம்பர் (ஹி.ச.)
திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, திப்ரா மோதா கட்சி மற்றும் திரிபுரா பழங்குடியினர் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் வரவிருக்கும் கிராமக் குழுத் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிடும் என்று முதல்வர் மாணிக் சாஹா இன்று உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துக்கொண்டு அகர்தலாவில் உள்ள மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலையம் வந்திறங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமக் குழுத் தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இணைந்து போட்டியிடுவோம். அதற்கு முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், இதில் திப்ரா மோதா கட்சியின் தலைவர் மகாராஜா பிரத்யோத் கிஷோர் மாணிக்யா மற்றும் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் கலந்துகொண்டதாகவும் சாஹா கூறினார்.
சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு மிகவும் நன்றாகவும், மிகவும் சாதகமாகவும் அமைந்ததாக அவர் விவரித்தார்.
மூன்று கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதாகவும், கிராமக் குழுத் தேர்தலுக்குப் பிறகு அதில் உள்ள உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
கூட்டணியின் நோக்கங்களை வலியுறுத்திய சாஹா, ஒற்றுமை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அனைவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 'சப்கா விகாஸ்' என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோம். வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தை மட்டும் முன்னேற்றிவிட்டு மற்றொரு சமூகத்தை விட்டுவிடுவதாக இருக்கக்கூடாது.
அனைத்து சமூகங்களுடனும் இணைந்து முன்னேறுவதே எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b