சத்யா நிகேதனில் கட்டிடம் இடிந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதலமைச்சர் ரேகா குப்தா
புதுடெல்லி, 06 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லி, சத்யா நிகேதன், ஆர்.கே.புரம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ
Delhi Chief Minister Rekha Gupta


புதுடெல்லி, 06 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லி, சத்யா நிகேதன், ஆர்.கே.புரம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சத்யா நிகேதன், ஆர்.கே.புரம் பகுதியில் ஏற்பட்ட கட்டிட இடிபாடு சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, மாநகராட்சி (MCD), மத்தியப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் காயச் சேவை (CATS), சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, அருகில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தால் ஏற்படக்கூடிய கூடுதல் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், சம்பவத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் நலனும் எங்களது மிக உயர்ந்த முன்னுரிமையாகும். சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்கும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P