சென்னையில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் - சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி. விமர்சனம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை மாநகரின் மையப்பகுதியில் ஒருவர் ஓட ஓட விரட்டிச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதுடன், அண்மையில் தமிழக வெற்றிக
Kani


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகரின் மையப்பகுதியில் ஒருவர் ஓட ஓட விரட்டிச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதுடன், அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில் தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலைநகர் சென்னை கொலைநகரமாக மாறிவிட்டதா என மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செயலிழந்துவிட்டதற்கும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கும் இந்தச் சம்பவங்கள் சாட்சியாக உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P