Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 06 செப்டம்பர் (ஹி.ச.)
ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர், சிறுவனை அங்குள்ள உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வயிற்றில் 3 பிளேடு துண்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
பின்னர் எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த 3 பிளேடு துண்டுகளையும் டாக்டர்கள் பத்திரமாக அகற்றினர்.
சிகிச்சைக்கு பிறகு சிறுவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படும் அந்த சிறுவன், பிளேடு துண்டுகளை விழுங்கியிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA