சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இருக்கிறதா? - முதல்வர் விஜய் கடும் தாக்கு
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) இன்றைய சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றபோது பேசிய முதல்வர் விஜய், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து போயிருந்ததாக குற்றம் சாட்டின
ijay launches a scathing attack.


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

இன்றைய சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றபோது பேசிய முதல்வர் விஜய்,

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து போயிருந்ததாக குற்றம் சாட்டினார். அந்தக் காலகட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தலைவிரித்தாடியதாகவும், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பேசுவதற்கு முன்பு தி.மு.க.வினர் கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது என்றும் முதல்வர் விமர்சித்தார்.

கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் மக்கள் மறந்து விட்டதாக தி.மு.க.வினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மக்கள் எதையும் மறக்கவில்லை, அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் அடிப்படை சட்டப்பூர்வ கடமையான முதல் தகவல் அறிக்கை கூட முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய முதல்வர், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான புகார்களில் வேண்டுமென்றே நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அப்போதே குற்றம் சாட்டியதை சுட்டிக்காட்டினார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் பிடியிலிருந்து தி.மு.க.வைச் சேர்ந்த பலர் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பதற்கு தம்மிடம் ஏராளமான ஆதாரங்களும், சில மாதிரிகளும் உள்ளன என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b