சட்டப்பேரவையை விட்டே ஓட்டமெடுத்த திராணியற்ற உதயநிதி - த.வெ.க ஐ.டி. விங்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில், “மூன்று நாட்கள் நேரமிருக்கிறது…
Vijay vs Udhayanidhi


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில்,

“மூன்று நாட்கள் நேரமிருக்கிறது… நன்றாகத் தயார் செய்து வாருங்கள்!” என்று வசனம் பேசிய பால்வாடி பாப்பாவே!

மாண்புமிகு முதலமைச்சர் பேச ஆரம்பித்ததும் மூன்று நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பதறிய பதறல்நிதியே!

தாத்தா காலம் முதல் செய்த விஞ்ஞான ஊழல்களைப் பற்றி வெற்றித் தலைவர் விவரிக்கக் கேட்டதும், “வெளியே ஓடவும் முடியாமல்… உள்ளே ஒளியவும் முடியாமல்…” திரிசங்கு நிலையில் நின்று கதறிய கதறல்நிதியே!

ஊழல் செய்யவில்லையென்று சொல்ல டர்ரெகனா? அந்த பயம் இருக்கணும்!

வெற்றித் தலைவர் பேசி முடித்ததும், “விட்டால் போதும்!” என்று சட்டப்பேரவையை விட்டே ஓட்டமெடுத்த திராணியற்ற ஓட்டநிதியே!

செய்தியாளர்களைச் சந்திக்க 30 நிமிடம் தயாராகியும், script paper-ஐ பார்த்துப் படித்த முதுகெலும்பற்ற பேப்பர்நிதியே!

“Insta-வில் reels போடுகிறார்கள்!” என்றுவிட்டு, வீட்டிற்குச் சென்று Insta-வில் story வைத்து ஒப்பாரி வைத்த ஆபாசநிதியே!

“சினிமாவில் என்னை நீங்கள் தான் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று யார் வீட்டு வாசலில் யார் watchman-ஆக நின்று காத்திருந்தார் என்ற அழியா வரலாற்றை மக்கள் மறக்கவில்லை, டம்மிநிதி!

Prepare well next time, ஓட்டநிதி!

ஓடுவதற்கல்ல… பதறாமல், கதறாமல், உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு

என்று பதிவிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN