விண்வெளியில் 2 செயற்கைக் கோள்கள் இணைப்பு-இஸ்ரோ வரலாற்று சாதனை!
புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.) ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூல
இஸ்ரோ


புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)

ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி அன்று முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பிறகு. ஜனவரி 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், ஜனவரி 9-ம் தேதி அன்றும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன. இந்நிலையில், விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது

Hindusthan Samachar / Durai.J