Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்டங்களான ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு நேரடியாகச் சிறப்புப் பேருந்து சேவைகளை முதன்முறையாக விரிவுபடுத்தியுள்ளது.
இது நாள் வரையில், சபரிமலைக்குச் செல்ல வெவ்வேறு மாவட்டங்களுக்கு, வடக்கு மாவட்ட பக்தர்கள் செல்லவேண்டிய நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலமான நவம்பர் 28, 2025 முதல் ஜனவரி 16, 2026 வரை இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோவில் நடை சாத்தப்படும் நாட்களான டிசம்பர் 27 முதல் 30 வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்படாது. அதன் பிறகு மீண்டும் சேவைகள் தொடரும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
அனைத்துப் பேருந்துகளிலும் GPS கண்காணிப்பு (GPS Tracking) வசதியும், அவசர உதவிக்கான வசதிகளும் (Emergency Assistance) உறுதி செய்யப்பட்டுள்ளன.
இது பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும். பக்தர்கள் தங்கள் பயணச் சீட்டுகளை www.tnstc.in என்ற SETC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b