தமிழக ஆளுநரைபயங்கரவாதி என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார் அப்பாவு - அண்ணாமலை கண்டனம்
சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பயங்கரவாதி என்று அழைத்தை கண்டித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவ
Annamalai


Twt


சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பயங்கரவாதி என்று அழைத்தை கண்டித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, திமுக அரசின் கீழ் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பயங்கரவாதி என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கொடூரமான தற்கொலைக் குண்டுவெடிப்பை திரு. அப்பாவு மறந்துவிட்டாரா?

பி.எஃப்.ஐ குண்டர்களால் பாஜக அலுவலகங்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகளை அவர் மறந்துவிட்டாரா?

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவது குறித்து என்.ஐ.ஏவின் செய்திக்குறிப்புகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா?

எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அரசாங்கம் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்படும் நிலையில், 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தியாகி போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ