வாராணசியில் துறவி​களும், மடங்​களின் தலை​வர்​களும் கோயில்களுக்கு வரி விதிக்க கடும் எதிர்ப்பு
புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.) உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட பல முக்​கிய​மானக் கோயில்​கள் உள்​ளன. இவற்​றில் பல்​வேறு பிரிவு​களின் துறவி​களுக்​கான மடங்​கள், தர்ம சத்​திரங்​களும் உள்​ளன. இவை அனைத்​துக்​கும் வா
வாராணசியில் துறவி​களும், மடங்​களின் தலை​வர்​களும் கோயில்களுக்கு வரி விதிக்க கடும் எதிர்ப்பு


புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட பல முக்​கிய​மானக் கோயில்​கள் உள்​ளன.

இவற்​றில் பல்​வேறு பிரிவு​களின் துறவி​களுக்​கான

மடங்​கள், தர்ம சத்​திரங்​களும் உள்​ளன. இவை

அனைத்​துக்​கும் வாராணசி மாநக​ராட்சி வரி வசூலிக்​கிறது.

வரி பாக்கி தொடர்​பாக

மாநக​ராட்சி கால அவகாசத்​துடன் நோட்​டீஸ்

அளித்​திருந்​தது.

வரி செலுத்​தாதவர்​களுக்கு ஜப்தி அறி​விப்​பும் ஒரிரு

நாட்​களுக்கு முன்​னர்

வழங்​கப்​பட்​டது.

இதற்கு துறவி​களும், மடங்​களின் தலை​வர்​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

வாராணசி பாதாளபுரி மடத்​தின் தலை​வர் ஜகத்​குரு பாலக தேவாச்​சார்யா கூறுகை​யில்,

எங்​கள் மடத்​துக்கு ரூ.2 லட்​சத்​துக்​கும் அதி​மான வரி நிலுவை இருப்​ப​தாக கூறி ஜப்தி அறி​விப்பு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

என்​றார்.

சித்தா பீடம் ஜாகேஷ்வர் மகாதேவ் கோயில் மடத்​துக்​கும் ரூ.65,000-க்கு மேல் வரி செலுத்த நோட்​டீஸ்

அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அந்த மடத்​தின் தலைமை அர்ச்​சகர் சுவாமி மதுர்

கிருஷ்ணா​வும் அதிருப்தி

தெரி​வித்​துள்​ளார்.

அவர் கூறுகை​யில்,

வரி செலுத்​தா​விட்​டால்

பறி​முதல், ஜப்தி என

அச்​சுறுத்​து​வது தவறு.

என்று தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், துறவி​கள் ஒன்று கூடி ஆலோ​சனை

கூட்​டம் நடத்​தினர்.

இக்​கூட்​டத்​தில், உ.பி. அரசின் நடவடிக்​கையை அவுரங்​கசீப் ஆட்​சிக் காலத்​தின் ஜசியா வரிக்கு ஒப்​பிட்டு தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

துறவி​களின் முக்​கிய

அமைப்​பான சனாதன தர்ம ரக்க்ஷா பரிஷத்​தின் கடிதத் தாளைப் (லெட்​டர் பேட்) பயன்​படுத்தி நாடு முழு​வதும் உள்ள சுமார் 20,000 துறவி​களும்,

மடத்​தின் தலை​வர்​களும் பிரதமர் மோடி, உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத்​துக்கு கடிதங்​கள் எழுதி வரு​கின்​றனர்.

இது குறித்து வாராணசி மாநக​ராட்சி மக்​கள் தொடர்பு அதி​காரி சந்​தீப் வஸ்​தவா கூறுகை​யில்,

மடங்​கள் மற்​றும் கோயில்​களிடம் இருந்து பெறப்​பட்ட வரி விலக்கு கோரும்

விண்​ணப்​பங்​கள் மீது

விசா​ரணை நடத்​தப்​பட்டு சொத்து வரி மட்​டும் ரத்து

செய்​யப்​பட்​டுள்​ளது.

மாநக​ராட்​சி​யின்

நிர்​ண​யிக்​கப்​பட்ட வி​தி​களின்​படி தண்​ணீர்​ மற்​றும்​

கழி​வுநீர்​ வரி மட்​டும்​

வி​திக்​கப்​படும்​.

என்​றார்​.

Hindusthan Samachar / JANAKI RAM