Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக பீகார் மாநில பொதுப்பணித்துறை மந்திரி நிதின் நபின் (வயது 45) அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நிதின் நபின் நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயபிரகாஷ்,
பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் நிதின் நபின் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு நாளை வர உள்ளார் என்று தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் நிதின் நபின், அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்ல உள்ளார் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM