Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 21 டிசம்பர் (ஹி.ச.)
அரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக் பகுதியில் இன்று (டிசம்பர் 21) நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b