Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களின் ஊதிய முறைகேடு புகாரை விசாரித்துவரும் சிறப்பு விசாரணைக் குழு ஊதிய பட்டுவாடா விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பணியில் உள்ளனா், ஆனால் கூடுதலான எண்ணிக்கையை குறிப்பிட்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் ஆணையரிடம் புகாா் மனு அளித்திருந்தார், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் குமாரகுருபரன் உத்தரவிட்டிருந்தார்.
முதல்கட்ட விசாரணையில், தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் வழங்கியதில் முறைகேடுக்கான முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, ஊதிய முறைகேடு நடந்திருப்பதை ஆதாரப்பூா்வமாகக் கண்டறியும் வகையில் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான ஊதிய விவரங்கள் கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு விசாரணை குழுவினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
அதில் கடந்த ஐந்து மாதங்கள் ஊதியம் பெற்றவா்களது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட முழு விவரங்கள் விசாரணை குழுவிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ