இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம்
சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளையும், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அளிக்கும் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23 அன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வரலாறு: இந
இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம்


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளையும், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அளிக்கும் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23 அன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

வரலாறு:

இந்தியாவின் 5-வது பிரதமரான சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளையே நாம் விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

இவர் விவசாயிகளின் சாம்பியன் என்று அழைக்கப்படுபவர். விவசாயிகளின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும்.

விவசாயத்தின் முக்கியத்துவம்:

கோடிக்கணக்கான மக்களுக்குத் தேவையான உணவை வழங்குபவர்கள் விவசாயிகளே.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

வெயில், மழை என எதையும் பாராமல் மண்ணை நம்பி உழைக்கும் இவர்களின் அர்ப்பணிப்பு ஈடுஇணையற்றது.

ஏன் கொண்டாட வேண்டும்?

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அரசுத் திட்டங்களை எடுத்துச் செல்லவும் இத்தினம் ஒரு பாலமாக அமைகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் - வள்ளுவரின் வாக்குப்படி, உலகிற்கு உணவளிக்கும் விவசாயிகளைப் போற்றுவதும், அவர்களைக் கைதூக்கி விடுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

Hindusthan Samachar / JANAKI RAM