Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 டிசம்பர் (ஹி.ச.)
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்று (டிச 04) இரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார்.
அப்போது இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு டெல்லி ஐடிசி மவுரியாஓட்டலில் அதிபர் புதின் நேற்றிரவு தங்கினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (டிச 05) காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b