அரசு மருத்துவமனை சென்ற நடிகர் கஞ்சா கருப்பு அதிருப்தி!
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனைக்கு கால் வலி காரணமாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே மருத்துவர்கள் யாரும் இல்லை என்று தெரி
அரசு மருத்துவமனை குறித்து நடிகர் கஞ்சா கருப்பு அதிருப்தி


சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனைக்கு கால் வலி காரணமாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே மருத்துவர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது.

அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்தவர்கள், நடிகர் கஞ்சா கருப்புடன் இணைந்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர்.

இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது,

லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா? இல்லையா? வெறிநாய் கடித்து ஒருவர் வந்திருக்கிறார். மண்டை உடைந்து மாணவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லை. என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b