குவாத்தமாலா பேருந்து விபத்து - 51 பேர் உயிரிழப்பு!
குவாத்தமாலா சிட்டி, 11 பிப்ரவரி (ஹி.ச.) எரிமலைகள் நிறைந்த மற்றும் உயரமான நாடு என்று சொல்லப்படும் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 70-க்கும் மேற்பட்டவர்க
51 பேர் உயிரிழப்பு


குவாத்தமாலா சிட்டி, 11 பிப்ரவரி (ஹி.ச.)

எரிமலைகள் நிறைந்த மற்றும் உயரமான நாடு என்று சொல்லப்படும் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று பால் பாலத்தின் மீது பயணிக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்து 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த விபத்து லத்தீன் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / J. Sukumar