ஒரே நாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ள பத்திரப்பதிவுத்துறை!
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.) முகூர்த்த நாளான நேற்று (10.02.2025) திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவ
ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ள பத்திரப்பதிவுத்துறை


சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

முகூர்த்த நாளான நேற்று (10.02.2025) திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மஙகளகரமான நாளான 10.02.2025 திங்கள்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 10.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அனைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் 10.02.2025 அன்று 2.,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் இடண்டாவது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar