Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பூர், 1 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை சடையபாளையத்தில் செயின்ட் ஜோசப் பப்பாளி காய் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
இந்த தொழிற்சாலையில் உள்ள பப்பாளி பதப்படுத்தும் தொட்டியில் பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் பிகால்(25) விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அதே மாநிலத்தை சேர்ந்த அருண் கோமாங்கோ(25) என்பவரும் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b