பயமே இல்லாத அணுகு முறை வைபவ் -சச்சின் டெண்டுல்கர்
ஜெய்ப்பூர், 29 ஏப்ரல் (ஹி.ச.) 2025 ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் டி20 வரலாறு படைத்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்
வைபவ் சூர்யவன்ஷி குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு


ஜெய்ப்பூர், 29 ஏப்ரல்

(ஹி.ச.)

2025 ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் டி20 வரலாறு படைத்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டு பதிவில்,

பயமே இல்லாத அணுகு முறை வைபவ் உடையது. பேட்டின் வேகம், பந்து வரும் தூரத்தை சற்று முன்பே கணித்து அணுகுவது, பந்தின் மீது தனது முழு சக்தியையும் இறக்குவது என எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸாக அமைந்தது.

நன்றாக ஆடினாய்! என பாராட்டியுள்ளார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM