அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பது இது முதல் முறையல்ல - சபாநாயகர் அப்பாவு
நெல்லை, 22 மே (ஹி.ச) நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் நெல்லையை சேர்ந்த நபர் திட்டமிட்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர் கு
Appavu pressmeet


நெல்லை, 22 மே (ஹி.ச)

நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் நெல்லையை சேர்ந்த நபர் திட்டமிட்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் செயல்பட்டு இருக்க வேண்டும் ஆனால் இந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வெளியான தீர்ப்பா அல்லது ஆர்எஸ்எஸ் சித்தாடத்திப்படி வெளியான தீர்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உடனடியாக சட்டமாக்கப்படுகிறது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் திட்டமிட்டு அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் செய்வதில் ஆளுனர்கள் அரசியல் செய்கிறார்கள்.

டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

ஏற்கனவே இது போன்ற அமலாக்கத்துறை செயல்பட்ட போது இரண்டு -மூன்று முறை கண்டிப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது ஆனாலும் அமலாக்கத்துறை இது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அனல் மின் நிலையங்களுக்கு ஏழு எரிதிறன் கொண்ட நிலக்கரியை வழங்குவதாக அதானி குழுமம் தருவதாக தமிழகத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் நாலரை எரி திறன் கொண்ட நிலக்கரியை அதானி குழுமம் வழங்கியது அதுவும் தரமற்றதாக இருந்தது.

இதில் 836 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஏ ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை செய்யும் அமலாக்கத்துறை அதானி 836 கோடி நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கை விசாரணை செய்யுமா? அப்படி செய்தால் அமலாகத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரச்சினைக்காகவும் அதன் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே கலந்து கொள்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கு திட்டக் குழுக்கள் செயல்பட்டு வந்த நிலையில் அனைத்து விதமான பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் அமைப்பாக நிதி ஆயோக் அமைப்பு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை சபாநாயகர் முன் வைத்தார்.

Hindusthan Samachar / Raj