Enter your Email Address to subscribe to our newsletters
அகமதாபாத் , 22 மே (ஹி.ச.)
குஜராத்தின் கிர் காடுகளில் காணப்படும் ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குஜராத் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 6 வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
தற்போது கணக்கெடுப்பு முடிவடைந்துள்ள நிலையில், கணக்கெடுப்பு விவரங்களை குஜராத் வனத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்துள்ளதாக, வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத்தில் மொத்தம் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளதாகவும், கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டதாகவும், எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில், 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள் மற்றும் 225 சிங்கக் குட்டிகள் அடங்கும்.
3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar