Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 மே (ஹி.ச)
செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமித்து விதிகளை மீறி, பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையின் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், திருப்போரூர் தாசில்தார், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை ஆணையம், முட்டுக்காடு பகுதியில் விதிமீறல் உள்ளதா என நேரில் ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விதிகள் மீறல் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை இசிஆர் கடற்கரையை ஒட்டிய பகுதியை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை ஜூன் 4 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
Hindusthan Samachar / Raj