தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு சுட்டுக்கொலை!
ராய்ப்பூர் , 22 மே (ஹி.ச.) நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு சுட்டுக்கொலை


ராய்ப்பூர் , 22 மே (ஹி.ச.)

நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராண்பூர் - பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான அடர்ந்த காட்டுப்பகுதியில், நான்கு மாவட்டத்தின் ரிசர்வ் கார்டு போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுமார் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மோதலில் பசவராஜு என்று அழைக்கப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ரான் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பசவராஜுவை பிடிப்பதற்கு ரூ.1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / J. Sukumar