Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 மே ( ஹி.ச)
சென்னையில் நடைபெற்ற பயோ டைவர்சிட்டி தொடர்பான கருத்தரங்கில் பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,
இந்தியாவில் தமிழக வனத்துறை தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும், அந்த அளவிற்கு இந்த துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். முந்தைய திமுக அரசு வேறு ; தற்போது உள்ள திமுக அரசு வேறு. முதலமைச்சர் ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஏற்கனவே பத்து துறைகளை நான் பார்த்திருக்கிறேன் . இந்த துறை புதிது. போகப் போக இந்த துறைகளைப் பற்றி தெரிந்து கொள்வேன்.
பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகள் தற்போது அதிக அளவில் பதிவாகின்றன. கடந்த காலங்களிலும் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் கூட, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விழிப்புணர்வு காரணமாகவும், அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதன் காரணமாகவும், தைரியமாக புகார் கொடுக்கிறார்கள் .
ஆனால் இந்த ஆட்சியில் தான் ஏதோ போக்சோ வழக்குகள் அதிகரித்து விட்டதை போன்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்கள்?
அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றார்.
Hindusthan Samachar / Raj