Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 22 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, பிரபல வார இதழ் ஒன்று நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வலுவான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறது.
இந்த கணெக்கெடுப்பில், 55.69% மக்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இது தற்போதைய ஆளும் கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஆட்சியின் மீதான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த கருத்துக் கணிப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடையே நடத்தப்பட்டு, அவர்களின் அரசியல் விருப்பங்களையும், ஆட்சி மீதான திருப்தியையும் அளவிட முயற்சித்தது. கணக்கெடுப்பின் முக்கிய கண்டுபிடிப்புகளைப் பார்க்கும்போது, திமுகவின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை விட விருப்பம் அதிகமாக இருப்பது தெளிவாகிறது. இது, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள் மக்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar