Enter your Email Address to subscribe to our newsletters
பாட்னா , 22 மே (ஹி.ச.)
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பீகார் மாநிலத்தில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
அப்போது மக்கள் முன்னிலையில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
நான் முதல்வராக நினைப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல்வர்களை உருவாக்க முயற்சித்தேன். இன்று நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும் போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / J. Sukumar