எடப்பாடி பழனிச்சாமி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக விமர்சனத்தை வைத்துள்ளார் - திருமாவளவன்
சிதம்பரம், 22 மே (ஹி.ச.) சிதம்பரம் ரயில் நிலையம் 6 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது, இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன் ப
VCK thirumavalavan pressmeet


சிதம்பரம், 22 மே (ஹி.ச.)

சிதம்பரம் ரயில் நிலையம் 6 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது, இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நிதி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது தமிழ்நாடு அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியும் தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது, இந்த நிலையில் முதலமைச்சர் நேரடியாக பங்கேற்று தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த செல்கிறார்.

பாரதிய ஜனதாவோடு அல்லது பாரதிய ஜனதா அரசோடு திமுக கொண்டு இருக்கிற மார்பாடு அல்லது முரண்பாடு என்பது வேறு மாநில ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நிதி பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடிகளை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கடமை வேறு இந்த நிதிக்குழுவில் முதலமைச்சராக மட்டும் தான் பங்கேற்க போகிறார், அதில் எந்த ஒரு அரசியலும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக விமர்சனத்தை வைத்துள்ளார் அது ஒரு அரசியல் விமர்சனம் அவ்வளவுதான்.

ஆனால் முதலமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு தருகின்ற நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது, அந்த கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் அணுகுகிறது.

அமலாக்கத்துறை விதிகளை விதிகளை மீறி செயல்படுகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்து கேட்டபோது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது வழிகாட்டுதல் என்று வரவேற்கிறோம் புலனாய்வு துறைகளை அந்த அமைப்புகளை இந்திய ஒன்றிய அரசு பாஜக அரசு தனது அரசியல் பகைவர்களுக்கு எதிராக ஏவி வருகிறது.

திமுக தலைமையிலான அரசுக்கு பல நெருக்கடிகளை அமலாக்கத்துறை மூலமாக தந்து கொண்டிருக்கிறது அதிலும் ஒன்றுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் மீதான சோதனை என்கிற செயலை சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் அதனை இன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து அமலாக்க துறையின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காரணத்தினால் இடைக்கால தடை போடப்பட்டுள்ளது இதனை வரவேற்கிறோம்.

ஆளுநர்கள் நியமனம் செய்வதில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இதுவரையில் அப்படி நடைபெற்றதாக சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக மசோதா கலை ஏற்று சட்டம் ஆக்கி உள்ளது அதன் அடிப்படையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் வேந்தர் என்கிற முறையில் முதலமைச்சருக்கு உறுதியாகி உள்ளது.

இதற்கு தடை விதிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு என்ன முகாந்திரம் உள்ளது தெரியவில்லை இது மிகுந்த அதிர்ச்சை அளிக்கிறது இதனையும் தமிழக அரசு சட்டபூர்வமாக சந்திக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Raj