ஒருவரின் சித்தாந்தத்துக்காக அவரை சிறையில் அடைக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, 22 மே (ஹி.ச.) கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் சத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத
ஒருவரின் சித்தாந்தத்துக்காக அவரை சிறையில் அடைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, 22 மே

(ஹி.ச.)

கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் சத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்ட நபர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் சீனிவாசன் கொலை வழக்கில் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபர் இல்லை என்றார்.

நீதிபதிகள் கூறுகையில்,

குற்றங்கள் செய்யாமல் தடுக்கும் நோக்கில் அவரை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று கோருவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தனர்.

குறிப்பாக ஒரு நபர் பின்பற்றும் சித்தாந்தத்துக்காக அவரை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த கொலை வழக்கில் இருந்து அப்துல்சத்தாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / B. JANAKIRAM