Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி , 22 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால், (வயது 40). கல்கண்டு தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இவருக்கும், கந்தபுரத்தை சேர்ந்த சிவபெருமாள் என்பவருக்கும், சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஜெயபால், கந்தபுரத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த, சிவபெருமாளின் தம்பி மோகன், (வயது 32), ஜெயபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குடிபோதையில் இருந்த அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயபாலை வெட்டிவிட்டு தப்பியோடினார். சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார்.
மெஞ்ஞானபுரம் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய மோகனை தேடி வந்த போலீசார், நேற்று அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ஜெயபாலுக்கு மனைவியும், 11 வயதில் மகள், 8 வயதில் மகனும் உள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar