Enter your Email Address to subscribe to our newsletters
புவனேஸ்வர், 31 மே (ஹி.ச.)
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர், சுரங்க நிறுவனர் ஒருவருக்கு எதிராக இருக்கும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, அவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த தொழிலதிபர் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிந்தன் ரகுவம்சி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, தொழிலதிபர் சிபிஐ-யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் பொறிவைத்து சிந்தன் ரகுவம்சியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவம்சியை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
சிந்தன் ரகுவம்சி குறைந்தது ஒன்பது தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், . இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை.
Hindusthan Samachar / J. Sukumar