Enter your Email Address to subscribe to our newsletters
பீகார், 31 மே (ஹி.ச.)
மதுவிலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் மதுபானங்களை கடத்த கடத்தல் காரர்கள் பல நூதன முறைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டருக்குள் அடைத்து வைத்து மதுபானங்களை கடத்தல் காரர்கள் கடத்த முயன்ற சம்பவம் பிஹார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் அரங்கேறியுள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் எரிவாயு சிலிண்டர்களை சுமந்தபடி வந்தனர்.
அப்போது காவல்துறையில் எரிவாயு சிலிண்டர் ஆய்வு செய்தபோது சிலிண்டருக்கு அடியில் வெட்டப்பட்டு பில்டிங் வைக்கப்பட்டது போல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்து ப சிலிண்டரை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர்.
அப்போது சிலிண்டருக்குள் எரிவாயுவுக்கு பதிலாக மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 33 லீட்டர் மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுபானங்களை கடத்த மைந்த உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் பகுதி சேர்ந்த சூரஜ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குதிரை உள்ளிட்ட விலங்குகளின் மீது வைத்து மதுபானங்கள் கடத்தல் ஆம்புலன்ஸில் மதுபானம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நூதன வழிகளை கையாண்டு கடத்தல் காரர்கள் தொடர்ந்து மதுவிலக்கு உள்ள பிஹார் மாநிலத்தில் மதுபானங்களை கடத்த முயற்சித்து வருவதும் காவல்துறையினர் அந்த முயற்சிகளை முறியடிப்பது தொடர்கதையாகி வருகிறது.
Hindusthan Samachar / Raj