முதலமைச்சரின் ரோட் ஷோ -பல மணி நேரமாக காத்திருந்த பெண்கள்
மதுரை, 1 ஜூன் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரை பெருங்குடி பகுதியில் இருந்து ஆரப்பாளையம் வரை ரோட் -ஷோ நடத்துவதாக கூறிய நிலையில் மதுரையின் பிரதான பகுதிகளான வில்லாபுரம் , சோலை அழகுபுரம் ,ஜெய்ஹிந்த்புரம் ,காளவாசல் பழங்காநத்தம் உள்ளிட்ட பகுத
Chief minister Stalin Madurai road show


மதுரை, 1 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரை பெருங்குடி பகுதியில் இருந்து ஆரப்பாளையம் வரை ரோட் -ஷோ நடத்துவதாக கூறிய நிலையில் மதுரையின் பிரதான பகுதிகளான வில்லாபுரம் , சோலை அழகுபுரம் ,ஜெய்ஹிந்த்புரம் ,காளவாசல் பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் 200 ரூபாய் கொடுத்து பொதுமக்களை மாலை 4 மணிக்கெல்லாம் அழைத்து வந்து நிறுத்தி வைத்தனர்.

ஆனால் முதலமைச்சர் தாமதமாக வந்த நிலையில் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் முதியவர்கள் பெண்கள் கால் கடுக்க காத்திருக்க முடியாமல் பாதியிலேயே வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது நீண்ட நேரமாக காத்திருந்த பெண் ஒருவர் மதுரை ஜெய்ஹிந்த்ரம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்தனர்.

4 மணி நேரத்திற்கு பின்பாக தாமதமாக வந்த முதலமைச்சராக காத்திருந்த பெண்கள் கையில் வைத்திருந்த திமுக கொடி மற்றும் வரவேற்பு பதாகைகளை வீசிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மூதாட்டி ஒருவர் கலைஞர் வருகிறார் என நினைத்து வந்தேன் எனவும் 200 ரூபாய் கொடுத்தார்கள் அதற்காகத்தான் வந்தேன் ஆனால் கால் கடுக்க காத்திருக்க வைக்கிறார்கள் என தெரிவித்தார்.

மாலை 4 மணிக்கு எல்லாம் 200 ரூபாய் பணத்திற்காக திமுகவின் பேட்ஜை டோக்கனாக மாற்றி அழைத்துவரப்பட்ட பெண்கள் நீண்ட நேரமாக காத்திருந்து முதலமைச்சருக்கு ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் ஆதரவு இருப்பது போல காட்டி பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர்.

முதலமைச்சர் ரோட்-ஷோவி பெருங்குடி முதல் ஜெய்ஹிந்த்புரம் ஆரப்பாளையம் காளவாசல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காளவாசல் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவசர வாகனமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது இதனால் ஆம்புலன்சில் இருந்த நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி அவதியுற்றனர்.

இதே போன்ற மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பணிகளை முடித்து வீடுகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்களும் பல்வேறு ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளும் பல மணி நேரமாக பேருந்து நிலையங்களிலே காத்திருந்தனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்காக மாலை 4 மணி முதல் இரவு 10:00 மணி வரை மதுரை மாநகர் பகுதி முழுவதிலுமாக போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டதால் மதுரை மாநகரப் பகுதி மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

முதலமைச்சர் ரோட் ஷோவிற்காக பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டு வழிநெடுகிலும் திமுக கொடி மரங்கள் ஆபத்தான முறையில் நட்டு வைக்கப்பட்டன மேலும் சாலைகளை பெயர்த்தெடுத்து நட்டு வைக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது.

ரோட் - ஷோ நடைபெற்ற பகுதிகளில் கடைகளுக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வியாபாரம் இல்லாத வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து சென்றனர்.

இதனால் தங்களது ஒரு நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மனக்குமுறலுடன் கடைகளை அடைத்து செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

மதுரை மாநகர் பகுதியில் நடைபெறவள்ள திமுக பொதுக் குழு கூட்டத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோட்- ஷோ என்ற பெயரில் ஒட்டுமொத்த மதுரை மாநகர் பகுதி மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியதுதான் மிச்சம் என ஒவ்வொரு மக்களும் புலம்பியபடி சென்றனர்.

Hindusthan Samachar / Raj