மதுரையில் 4 மணி நேரத்திற்கு மேலாக 18 கிலோ மீட்டர் பயணித்து மக்களை சந்தித்த முதலமைச்சர்
மதுரை, 1 ஜூன் (ஹி.ச.) மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக தற்போது மதுரைக்கு வந்துள்ளார். முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகர பகுதிகளில் 18
Tamilnadu chief minister Stalin


மதுரை, 1 ஜூன் (ஹி.ச.)

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக தற்போது மதுரைக்கு வந்துள்ளார்.

முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகர பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு சோவில் பங்கேற்று மக்களை சந்தித்தார், மாலை 5.30 மணிக்கு பெருங்குடியில் தொடங்கிய ரோடு சோ அவனியாபுரம் வில்லாபுரம், ஜெயவிலாஸ் சந்திப்பு, சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம், A.A.ரோடு, புது ஜெயில் ரோடு வழியாக ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் இரவு 9.15 மணிக்கு நிறைவடைந்தது.

பெருங்குடி முதல் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முதலமைச்சரை வரவேற்றனர், மதுரையில் மேயர் முத்துவின் வெங்கல சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்,

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் வெங்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்,

இந்த நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் மற்றும் மேயர் முத்து குடும்பத்தினர் பங்கேற்றனர், 1971 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் இரு முறை மதுரை மாநகராட்சியின் மேயராக முத்து பதவி வகித்தார்,

1999 ஆம் மேயர் முத்துவிற்கு இப்பகுதியில் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டு இருந்தது, முரட்டுப்பிள்ளை என அண்ணாவாலும், முத்து எங்கள் சொத்து என கலைஞராலும், முத்தண்ணன் என அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் மேயர் முத்து,

பின்னர் மேயர் முத்துவின் மகன் கருணாநிதி கூறுகையில்,

எனது தந்தையின் சிலையை கலைஞர் திறந்து வைத்தார், அச்சிலையை வெங்கல சிலையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது, திராவிடர் கழகம் திராவிடர் முன்னேற்ற களமாக மாறியபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்களின் என் தந்தையின் ஒருவர், திமுகவின் வளர்ச்சிக்கு மேயர் முத்து பாடுபட்டவர் மதுரையின் இரும்பு மனிதர், மதுரை மேயர் முத்து திமுகவின் சொத்தாக திகழ்ந்தார் என கூறினார்,

முதலமைச்சர் இன்று காலை 9 மணிக்கு அழகர் கோவில் சாலையில் இருந்து உத்தங்குடி வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோட் ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார். காலை 9.30 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார், 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மதுரை வருவது ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, மேலும், ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Raj