Enter your Email Address to subscribe to our newsletters
மதுராந்தகம், 1 ஜூன் (ஹி.ச.)
தார்ச்சாலையை சீரமைக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று 3 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்து உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கரிக்கிலி, நெல்வாய் மற்றும் மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கிலி ஊராட்சியின் கிருஷ்ணாபுரம் கிராமம் துவங்கி நெல்வாய், மங்கலம் ஊராட்சிகளின் வழியாக நெல்வாய் கூட்ரோடு பகுதியை தார்ச்சாலை அடைகிறது. இந்த கூட்ரோடு பகுதிக்கு வந்துதான் பஸ் பிடித்து உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் சேதம் அடைந்துள்ளதார்ச்சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று கிரா மக்கள் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / B. JANAKIRAM