Enter your Email Address to subscribe to our newsletters
ஹாங்காங் , 13 செப்டம்பர் (ஹி.ச.)
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடி உடன் இன்று மோதியது.
இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர்செட்கணக்கில் வெறும் 38 நிமிடங்களில் எளிதாக வெற்றி பெற்று இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2024 ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனுக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுவரை ஐந்து அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த சாத்விக் - சிராக் ஜோடி, இந்த வெற்றியின் மூலம் தங்களது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar