குறுகிய கால முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் இந்த ஐந்து லார்ஜ் கேப் பங்குகளை வாங்கலாம்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) நீங்கள் செப்டம்பர் 2025 இல் சில லார்ஜ் கேப் பங்குகள் உங்களுக்கு கைகொடுக்கும் என குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஏனெனில் ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 22 அன்று முதல் அமலுக்கு வரும் என்பதால், சில பங்குகள் செ
குறுகிய கால முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் இந்த ஐந்து லார்ஜ் கேப் பங்குகளை வாங்கலாம்


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

நீங்கள் செப்டம்பர் 2025 இல் சில லார்ஜ் கேப் பங்குகள் உங்களுக்கு கைகொடுக்கும் என குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஏனெனில் ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 22 அன்று முதல் அமலுக்கு வரும் என்பதால், சில பங்குகள் செப்டம்பரில் அதிகப்படியாக 12 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை உயரும் என மோதிலால் ஓஸ்வால் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

HDFC வங்கி

தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு, மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் ரூ.1,150 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது . இது பங்கின் நேற்று வர்த்தகமான கடைசி விலையான ரூ.966.90 இருந்து 19 சதவீத உயர்வைக் குறிக்கிறது.

ஏனெனில் 2026 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் MOSL தெரிவித்துள்ளது. குறிப்பாக வைப்புத்தொகை வளர்ச்சி வலுவாக உள்ளது, இருப்பினும் இணைப்புக்குப் பிறகு CASA 34 சதவீதமாக மிதமாக உள்ளது. SME அழுத்தம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட CV மந்தநிலை இல்லாமல் சொத்து தரம் ஆரோக்கியமாக உள்ளது. குறிப்பாக RoA/RoE 1.9 சதவீதம்/14.9 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பங்கை செப்டம்பர் மாதம் வாங்கும் பட்டியலில் இணைக்கப் பரிந்துரைத்துள்ளனர்.

பார்தி ஏர்டெல் - Bharti Airtel

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பங்கு விலை செப்டம்பரில் ரூ. 2,285 இலக்கு விலையை எட்டும் என மோதிலால் ஓஸ்வால் கூறுகிறது. இது நேற்றைய நாளின் முடிவில் வர்த்தகமான ரூ.1,903.70 இருந்து 20 சதவீத உயர்வைக் குறிக்கிறது.

ஏனெனில் பார்தி ஏர்டெல் அதன் பிரீமியமயமாக்கல் உத்தி, ஏர்டெல் ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் மற்றும் நிதி சேவைகளில் வளர்ச்சி மற்றும் லாப விரிவாக்கம் ஆகியவற்றிலிருந்து லாபம் ஈட்டும் என்று MOSL தெரிவித்துள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர் - Hindustan Unilever

FMCG நிறுவனமான இந்துஸ்தான் யூனிலிவர் இந்த மாதம் 14 சதவீதம் வரை விலை உயரும் என மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது. நிறுவனம் அதன் நேற்றைய வர்த்தக விலையான ரூ.2,582.00 இருந்து ரூ.3000 இலக்கு விலையை எட்டும் எனக் கூறியுள்ளது.

ஏனெனில் ஜிஎஸ்டி 2.0 இல் உணவு பொருட்கள் மீதான வரியை 5% குறைக்கும் என்பதால், இந்நிறுவனத்தில் லாபம் உயரும் எனக் கணித்துள்ளது.

அல்ட்ராடெக் சிமென்ட் - UltraTech Cement

சிமென்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு MOSL ரூ.14,600 இலக்கை நிர்ணயித்துள்ளது , இது நேற்றைய பங்கின் கடைசி வர்த்தக விலையான ரூ.12,370 இருந்து 18 சதவீத உயர்வைக் குறிக்கிறது. அதனால் பங்கை செப்டம்பர் மாதம் வாங்கும் பட்டியலில் மோதிலால் ஓஸ்வால் இணைத்துள்ளது.

நிப்பான் ஏஎம்சி

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்கிர்கு தரகு நிறுவனம் ரூ.930 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. பங்கு விலை அதன் தற்போதைய விலையிலிருந்து 12 சதவீத உயர்வைக் குறிக்கிறது. நிறுவனத்தின் வருவாய்/EBITDA/PAT CAGR ஐ 2025-27 உடன் ஒப்பிடும்போது 14 சதவீதம்/16 சதவீதம்/15 சதவீதம் எதிர்பார்ப்பதாக தரகு நிறுவனம் கூறியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM