Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி தாங்-டா தற்காப்பு கலைகள் சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலைகள் குறித்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பிரசிடென்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாங்-டா தற்காப்பு கலை சங்கத் தலைவர் கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினார்.
Hindusthan Samachar / Durai.J