தெருநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, 17 செப்டம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் அருகேயுள்ள அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மல்லப்பாவை கடந்த மாதம் 27 ஆம் தேதி தெருநாய் ஒன்று முகத்திலேயே கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவம
தெருநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு


கிருஷ்ணகிரி, 17 செப்டம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் அருகேயுள்ள அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மல்லப்பாவை கடந்த மாதம் 27 ஆம் தேதி தெருநாய் ஒன்று முகத்திலேயே கடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குட்டப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் என்ற 24 வயது இளைஞர் இதேபோல் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தகுந்தது.

Hindusthan Samachar / vidya.b