Enter your Email Address to subscribe to our newsletters

கோலாலம்பூர், 10 ஜனவரி (ஹி.ச.)
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-11 என முதல் சுற்றை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தின் போது யமாகுச்சிக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.
இதனால் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM