டெல்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி 2026 இன்று தொடங்குகிறது
புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.) உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான புது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி (NDWBF) 2026, இன்று (ஜனவரி 10) புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. புத்தகங்கள், கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களின்
உலகப் புத்தகக் கண்காட்சி 2026 இன்று தொடங்குகிறது


புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.)

உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான புது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி (NDWBF) 2026, இன்று (ஜனவரி 10) புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது.

புத்தகங்கள், கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களின் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படும் இந்த இலக்கிய நிகழ்வு ஜனவரி 18, 2026 வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக, பொதுமக்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.

உலகப் புத்தகக் கண்காட்சியானது நாடு முழுவதும் ஒரு வலுவான வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காக, மக்களிடையே பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

இக்கண்காட்சியின் 53வது பதிப்பு, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளையால் (NBT) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட நாடுகள், 1,000-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், 3,000-க்கும் மேற்பட்ட அரங்குகள், 600 இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட பேச்சாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இக்கண்காட்சியானது உலகின் மிகப்பெரிய இலக்கியக் கூட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தக் கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா குறித்துத் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2026-ஐ இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டு கண்காட்சி, ‘இந்திய இராணுவ வரலாறு: வீரம் மற்றும் ஞானம் 75’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் குறிப்பிடத்தக்க தருணங்கள், பங்களிப்புகள் மற்றும் வரலாறுகளை எடுத்துரைக்கிறது.

கத்தார் கௌரவ விருந்தினர் நாடாகவும், ஸ்பெயின் மைய நாடாகவும் இருக்கும், இது இந்த நிகழ்விற்கு செழுமையான சர்வதேசப் பார்வைகளைச் சேர்க்கிறது.” இந்த ஆண்டுக்கான மையக் கருப்பொருள், ‘இந்திய இராணுவ வரலாறு: வீரம் மற்றும் ஞானம் 75’, என்பது இந்தியாவின் ஆயுதப் படைகளின் துணிச்சல், வியூகத் திறமை மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, தேசத்தின் பாதுகாப்பு மரபை வடிவமைத்த குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கற்களையும் கதைகளையும் காட்சிப்படுத்துகிறது.

ஒரு உலகளாவிய பரிமாணத்தைச் சேர்க்கும் விதமாக, கத்தார் கௌரவ விருந்தினராகவும், ஸ்பெயின் மைய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது இந்தியப் பார்வையாளர்களுக்குப் பல்வேறு சர்வதேச இலக்கிய மற்றும் கலாச்சாரப் பார்வைகளைக் கொண்டுவருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b