Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 ஜனவரி (ஹி.ச)
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 11) ஜெயின் அறிஞர் ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகாராஜின்
500-வது நூல் வெளியீட்டு விழாவில் காணொளிச் செய்தி மூலம் உரையாற்றி, அவரது பங்களிப்புகளைப் பாராட்டினார்.
இந்த காணொளியை பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வை புனிதமானது என்று குறிப்பிட்ட பிரதமர், விழாவில் கலந்துகொண்ட மூத்த ஜெயின் ஆச்சார்யர்களுக்கும் துறவிகளுக்கும் மரியாதை செலுத்தினார்.
டன், ஊர்ஜா மகோத்சவக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், மகாராஜின் இலக்கியப் பயணத்தை எண்ணற்ற சிந்தனை மணிகளைக் கொண்ட ஒரு பரந்த பெருங்கடல் என்று பிரதமர் வர்ணித்தார்.
மேலும், அவரது படைப்புகள் சமகால சவால்களுக்கு எளிய மற்றும் ஆன்மீகத் தீர்வுகளை வழங்குகின்றன என்றும் கூறினார்.
மகாராஜின் கட்டுப்பாடு, எளிமை மற்றும் தெளிவு ஆகியவற்றின் கலவையை அவர் எடுத்துரைத்தார். அவரது எழுத்துக்களில் அனுபவத்தின் ஆழம் இருப்பதாகவும், அவரது பேச்சில் கருணை இருப்பதாகவும், ஏன் அவரது மௌனம் கூட வழிகாட்டுதலை வழங்குவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமீபத்திய நூலின் கருப்பொருளான பிரேம்னு விஷ்வா, விஷ்வனோ பிரேம் (அன்பின் உலகம், உலகின் அன்பு) என்பதை மோடி பாராட்டினார்.
உலகம் பிளவு மற்றும் மோதல்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் இது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார். இது ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஒரு மந்திரம், என்று கூறிய அவர், அன்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதி குறித்த அதன் செய்தி இன்று அவசியமாக தேவைப்படுகிறது என்று வலியுறுத்தினார்.
அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை என்ற ஜெயின் கொள்கையான பரஸ்பரோபக்ரஹோ ஜீவனம் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உலகக் கண்ணோட்டம், தனிப்பட்ட லட்சியங்களுக்கு அப்பாற்பட்டு, தேசிய மற்றும் மனிதாபிமான இலக்குகளைப் பற்றி கூட்டாகச் சிந்திக்க சமூகத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.
நான்கு ஜெயின் பிரிவுகளும் ஒன்றிணைந்த நவ்கர் மந்திர தினத்தை நினைவு கூர்ந்த மோடி, தான் முன்னரே கோடிட்டுக் காட்டிய ஒன்பது தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்தினார்: தண்ணீரைச் சேமிப்பது, தாயின் பெயரில் ஒரு மரம் நடுவது, நாட்டைத் தூய்மையாக வைத்திருப்பது, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது, பாரத தரிசனத்தை மேற்கொள்வது, இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, யோகா மற்றும் விளையாட்டுகளை அன்றாட வாழ்வில் இணைப்பது, மற்றும் ஏழைகளுக்கு உதவ உறுதியளிப்பது ஆகியவை அந்தத் தீர்மானங்களாகும்.
உலகிலேயே இளம் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கையும் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் கலாச்சார வேர்களை வலுப்படுத்திக்கொண்டே ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குகிறார்கள்,என்று அவர் கூறினார்.
மேலும், மகாராஜ் போன்ற துறவிகளின் வழிகாட்டுதல் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது உரையை முடிக்கும்போது,
500-வது வெளியீட்டிற்கு பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மகாராஜின் சிந்தனைகள் இந்தியாவின் அறிவுசார், தார்மீக மற்றும் மனிதப் பயணத்திற்கு தொடர்ந்து பங்களிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b