Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 12 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சமுத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுபட்டி,பெரியகுளம்
ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு , 18.5.2021 முதல் 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையிலிருந்து மொத்தம் 102.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J