Enter your Email Address to subscribe to our newsletters

ராய்பூர், 17 ஜனவரி (ஹி.ச.)
மத்திய அரசின் நக்சல் ஒழிப்பு திட்டம் வட மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் சத்தீஸ்கரின் தண்டேவாடா, சுக்மா மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழிக்கும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நக்சலைட்டுகள் சரண் அடையும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b