Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 02 ஜனவரி (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்ட நிலையில், நேற்று இரவு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தற்போது வரை மழையானது குறையாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் நிலையில், குற்றால அருவியில் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புவியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுமே தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN