வடமேற்கு டெல்லியில்‌ போக்குவரத்து நெரிசலைக்‌குறைக்க‌ புதிய மேம்பாலம்‌ கட்ட பொதுப்பணித்‌துறை முடிவு
புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.) வடமேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக், கேஷோபூர், ஹைதர்பூர், பிடாம்பூரா, ஷாலிமார் பாக், ரோஹிணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த மண்
வடமேற்கு டெல்லியில்‌ போக்குவரத்து நெரிசலைக்‌ குறைக்க‌ புதிய மேம்பாலம்‌ கட்ட பொதுப்பணித்‌ துறை முடிவு


புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)

வடமேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக், கேஷோபூர், ஹைதர்பூர், பிடாம்பூரா, ஷாலிமார் பாக், ரோஹிணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த மண்டலங்களில் வாகனப் பெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில், கேஷோபூர் பணிமனை அருகில் துணை வடிகாலையும், ஹைதர்பூரையும் இணைக்கின்ற ஒரு பிரம்மாண்டமான மேம்பாலத்தை அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை வல்லுநர்கள், பாலத்தின் மாதிரி வடிவம், சுற்றுச்சூழல் பாதிப்பு, உறுதித்தன்மை போன்ற பல்வேறு அம்சங்களையும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர்.

வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், எவ்வித தடங்கலும் இன்றி மேம்பாலம் கட்டி முடிக்கப்படவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தகவலை, டெல்லி அரசின்‌ பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ பர்வேஷ்‌ சாஹிப்‌ சிங்‌ வர்மா தெரிவித்து உள்ளார்‌.

Hindusthan Samachar / JANAKI RAM