Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு 16-வது தேசிய வாக்காளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
உருவான வரலாறு :
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட தினமான ஜனவரி 25, 1950-ஐ நினைவு கூறும் வகையில், 2011-ம் ஆண்டு முதல் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய நோக்கம் :
இளம் வாக்காளர்களைத் தேர்தல் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிப்பது மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது.
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.
ஜனநாயகம் செழிக்க 100% வாக்குப்பதிவை உறுதி செய்வது.
2026-ம் ஆண்டின் கருப்பொருள்
வாக்களிப்பதைப் போல் எதுவும் இல்லை, நான் நிச்சயம் வாக்களிக்கிறேன் என்பதாகும். இது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர் தின உறுதிமொழி:
வாக்காளர் தினத்தின் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கீழ்க்கண்ட உறுதிமொழி எடுக்கப்படுகிறது:
இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும், மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிப்போம் என்றும் உறுதி கூறுகிறோம்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் :
வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மற்றும் கடமையாகும்.
ஒரு வாக்கின் மூலம் நாட்டின் எதிர்காலத் தலைவரையும் கொள்கைகளையும் தீர்மானிக்க முடியும்.
என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற உறுதியுடன் நேர்மையான முறையில் வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும்.
புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்ய தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் அல்லது 'Voter Helpline' செயலியைப் பயன்படுத்தலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM